சென்னை: லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம் 22 சதவீதம் உயர்கிறது. சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று புக்கிங் ஏஜென்ட் சம்மேளனம் தகவல் தெரிய்வ்துள்ளது. ஜூலை முதல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து லிட்டருக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாததால் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் சரக்கு கொண்டு செல்லப்படும் லாரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இது தொடர்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் மீதான காலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்படவில்லை. இதனை அடுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.