ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம்…

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்களின் இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐயப்பனை விட நீதிமன்றம் பெரியது இல்லை என்று கூறிய போராட்டக்காரர்கள், இந்த விஷயத்தில் மத்திய,மாநில அரசுகள் இணைந்து ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *