உள்ளாட்சி தேர்தலை நடத்த கால தாமதமாவதற்கு தமிழக அரசு தான் காரணம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்….

உள்ளாட்சி தேர்தல் கால தாமதமாவதற்கு தமிழக அரசு தான் காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிடாததால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மாநில தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. உள்ளாட்சி தேர்தலின் சட்ட உட்பிரிவுகளை திரும்ப பெற்றதால், நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று கூறிய நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *