இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை; அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்…

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சித்ரவதை முகாம்கள் இல்லை என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவில், ஏராளமானோர் ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ராஜபக்சே மீது குற்றம்சாட்டியிருந்தன. இந்நிலையில், மாகாண உள்ளூர் கவுன்சில் தேர்தலுக்காக அதிபர் சிறிசேன யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது பேசிய அவர், இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போன தமிழர்கள் குறித்தும் அவர்களை கண்டறிவது குறித்தும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காணாமல்போனவர்கள் ரகசிய முகாம்களில் சித்ரவதை செய்யப்படுவதாக கூறப்படுவது தவறு என்றும், சித்ரவதை முகாம் இலங்கையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *