போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரான்சில் இருந்து ரபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது என்றும் அதன் விலையை அறிவிக்க பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இந்த ஒப்பதத்தை மாற்றி அமைத்துள்ளார் என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த ஊழலில் பிரதமர் மோடியும் ஒரு காரணமாவார் என்று ராகுல் காந்தி சுட்டிகாட்டினார்.