தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் எஸ். பி. வேலுமணி , யார் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் அதிமுக கட்சி எப்போதும் நிலைத்து இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை அதிமுக சந்திக்க தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாரதியார் பல்கலைக் துணைவேந்தர் ஊழல் புகாரில் கைது செய்துள்ளது குறித்த கேள்விக்கு யார் தவறு செய்தாலும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *