வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், புயல் சின்னம் காரணமாக, நவம்பர் 14ஆம் தேதி வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.