மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 5 கோடி ரூபாய் கேட்டதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.சி. குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.சி.யான முகுல் உபாத்யாய், தற்போதைய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவான ராம்வீரின் சகோதரர் ஆவார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் இவரை அண்மையில் கட்சியில் இருந்து மாயாவதி நீக்கினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முகுல் உபாத்யாய், வரும் மக்களவைத் தேர்தலில் அலிகார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு மாயாவதி தன்னிடம் 5 கோடி ரூபாய் கேட்டதாகத் தெரிவித்தார்.