ஜோர்டானில் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் பரிதாபமாக பலியாகினர். தொன்மைவாய்ந்த பெட்ரா நகரின் அம்மன், வடி முசா உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். பெட்ராவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் 3 ஆயிரத்து 600 பேர் உள்ளிட்ட அனைவரும், உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2018-11-10