தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைபெய்யும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *