ரஃபேல் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவுக்கு செல்கிறதே என்ற ஆத்திரத்தில் தான் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதாக ராஜஸ்தான் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் வேறு எதையும் கூற வழியில்லாமல் காங்கிரஸ் கட்சி ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய்ப் புகார்களை கூறி வருவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய ராஜஸ்தான் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ், இந்து தீவிரவாதிகள் லஷ்கர் தீவிரவாதிகளைவிட மோசமானவர்கள் என ராகுல் தெரிவித்ததாகவும், பாகிஸ்தானுடன் நட்புடன் இருக்க இந்துக்களை தீவிரவாதிகள் என ராகுல் குறிப்பிடுவதாகவும் கூறினார். அந்த வகையில் ரஃபேல் ஒப்பந்தம் தனது நண்பர்கள் இருக்கும் பாகிஸ்தானுக்கு செல்லாமல், இந்தியாவுக்கு வந்ததால் ராகுல்காந்தி எரிச்சலடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்