குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு

குஜராத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிறிய தீவில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் 597 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கிய சிலை அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள், வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், அன்றைய நாளில் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.

இதில், பங்கேற்க வருமாறு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, குஜராத் சுற்றுலாத் துறை அமைச்சர் கண்பத்சிங் வத்சவா மற்றும் அதிகாரிகள் அழைப்பிதழ் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *