11,12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இந்தப் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்பு பயிலும் 424 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அப்போது இலவச ரோபோட்டிக் பயிற்சி மூலம் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய ரோபோக்களை காட்சிப்படுத்தினர். தாங்களே உருவாக்கிய ட்ரோன் ஒன்றையும் மாணவர்கள் பறக்கவிட்டனர்.

ட்ரோன் மற்றும் ரோபோக்களை உருவாக்கிய மாணவர்களை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில்
கல்வி இடைநிற்றல் சதவீதம் குறைவாகவே உள்ளது எனக் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *