சிவகங்கை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்தடைந்திருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு, வைகை-பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் வந்தடைந்திருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியாறு-வைகை பாசன கால்வாயில் சிவகங்கை தெப்பகுளத்திற்கு 200 கணஅடி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, கால்வாய் ஆக்கிரமிப்புகள் இரவு பகலகாக அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பெரியாறு-வைகையாற்றுத் தண்ணீர், கால்வாய் மூலம், சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வந்தடைந்தது..

அமைச்சர் பாஸ்கரன் மற்றும் ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டர் மலர்கள் தூவி, தண்ணீரை வரவேற்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த தண்ணீரை வழிநெடுகிலும், பொதுமக்கள், பால் ஊற்றியும், மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *