பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் ராஜ்கிர் நகரில் ஏரிக்கு நடுவே 70 அடி உயரமுள்ள புத்தர் சிலையை திறந்துவைத்தார். ராஜ்கிர் நகரில் உள்ள கோரா கட்டோரா ஏரியின் நடுவே 1 உயர்ந்த பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நாட்டின் 2-வது உயரமான புத்தர் சிலையாகும். மகாபோதி ஆலயத்தின் தலைமைத் துறவி பந்தே சலிந்தா முன்னிலையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சிலையை திறந்துவைத்தார்.
புத்தர் சிலை முன் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்ட நீதிஷ்குமார் படகு மூலம் சிலையை வலம் வந்தார். இந்த ஏரி அருகே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பூங்கா அமைக்கப்படும் என்றும் நிதீஷ்குமார் தெரிவித்தார்.