கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போதிய அக்கறையுடன், முயற்சியுடன் பணியாற்றியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில இடங்களில் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை என்றபோதும், அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது என்று கூறினார்.