மாலத்தீவுக்கு 9800 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
மாலத் தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற இப்ராகிம் முகம்மது, 3 நாள் சுற்றுப்பயணமாகவும், முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் இந்தியா வந்தார். டெல்லியில் அவர், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இருதரப்பிலும் நட்புறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா – மாலத்தீவு இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.