கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளதாக தகவல்

கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் நிலவரப்படி ஃபேஸ்புக்கிற்கு இந்தியாவில் 29.4 கோடி பயனாளர்களும், வாட்ஸ்ஆப்புக்கு கடந்த பிப்ரவரி நிலவரப்படி 20 கோடி பயனாளர்களும் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், இணைய நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர் தொடர்பான விவரங்களை இந்தியாவில் உள்ள சர்வர்களிலேயே வைத்திருக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது இந்தியர்கள் தொடர்பான விவரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, விளம்பரம் செய்தல், லைவ் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட அந்நிறுவனங்களின் பல்வேறு சேவைகளுக்கு வரி விதிக்கவும் வகைசெய்யும் என அரசு திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் மட்டுமின்ற பல்வேறு வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *