புயல் பாதித்த 7 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிர சிகிச்சையை பொருத்தவரை எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன்கள் எடுக்க எப்போதும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது பொதுவான நடைமுறை என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது புயல் பாதித்த 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமின்றி ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம் என்று விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.