புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகளுக்கான மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 5 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இம்மாதம் 30 ஆம் தேதி வரை அபராதம் இல்லால் செலுத்தலாம் என ஏற்கனவே மின்வாரியம் அறிவித்திருந்தது.
தற்சமயம் திருவாரூர், தஞ்சாவூர் திருச்சி மெட்ரோ, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வீடுகளுக்கான தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் மின்நுகர்வோர் மட்டும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.