நாடு முழுவதும் 65ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரியுள்ளன.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியன நாடு முழுவதும் 65ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்காக விண்ணப்பங்களை வரவேற்றுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவு வெளியான பின் அறிவிப்பு வெளியிடப்படும்.((நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு வாக்குகளைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.)) திட்டமிடப்பட்டுள்ள 65ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அடுத்த மூன்றாண்டுகளில் அமைக்கப்படும்.