நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கினார் இலங்கை அதிபர் சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கி உள்ள நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக, பதவிநீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை ஏற்காத ரணில் விக்ரமசிங்கே, தான் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், பெரும்பான்மை பலத்துடன் உள்ள தன்னை நீக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அதிபரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

வருகிற 5-ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் தொடங்கவிருந்த நிலையில், அவசரமாகக் கூட்ட வேண்டும் என சபாநாயகருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
நாடாளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்

இதை தொடர்ந்து இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *