தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 11முதல் 15வரை 5நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டுறவின்மூலம் உலகின் அமைதிக்கும் வளத்துக்கும் பங்களிப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளுடன் வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் மோடி பேச்சு நடத்தினார்.