புதுச்சேரியில் காலை முதல் கடல் சீற்றம்..!

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் 3வது நாளாகக் கடலுக்குள் செல்லவில்லை.

500க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கஜா புயலால் கனமழை இருக்கும் என்ற காரணத்தில் அனைத்து கல்லூரி , பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காலை முதலே புதுச்சேரி கடல் சீற்றமாக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *