நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்பினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மீன்பிடி படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் யாரும் தற்போது நடுக்கடலில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
2018-11-15