தி.மு.க. சார்பில் கஜா புயல் நிவாரண நிதி ரூ. 1 கோடியை முதலமைச்சரிடம் துரைமுருகன் வழங்கினார்

தி.மு.க. சார்பில் கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினார். புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி சார்பில் புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்த துரைமுருகன், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *