புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 5 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் செயல்படும் 23 பொறியியல் கல்லூரிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் நாளை முதல் வழக்கம் போல் தேர்வுகள் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *