வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலா மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடதமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரைப் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுவையில் மழை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, வடதமிழகம், புதுவையில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மழை தொடரும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறாது எனவும், அதே நிலையில், தமிழக உள்பகுதிகளில் கடந்து செல்லும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னர் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரைப் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுவையில் மழை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, வடதமிழகம், புதுவையில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மழை தொடரும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *