தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம் : கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம்

 தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நிலத்தடி நீரை எடுப்பதற்கு நிபந்தனைகள் விதித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 400 கேன் குடிநீர் உற்பத்தி மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால், கேன் குடிநீரின் விலை உயர்வதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *