அலஹாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம்..!

அலஹாபாத் நகருக்கு பிரயாக்ராஜ்  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அமைச்சர் சித்தார்த் நாத் சிங்  தெரிவித்துள்ளார்.

அலகாபாத்துக்கு பிரயாக்ராஜ் என்று பெயர்மாற்றம் செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கும்பமேளாவுக்கு முன் அலகாபாத்துக்கு பெயர் மாற்றம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் இன்று முதல் அலஹாபாத் பிரயாக் ராஜ் என அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *