கொடைக்கானல் பகுதியில் சௌவ்சௌவ் விளைச்சல் அமோகம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுப்பகுதியில் சௌவ்சௌவ்  விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வாழைகிரி, ஊத்து, வடகரைபாறை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சௌவ்சௌவ், மிளகு, காபி, வாழை, ஆரஞ்சு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் நல்ல மழை பெய்ததால், சௌவ்சௌவ் பயிர்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளன.

இவற்றை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு  ஒரு கிலோ சௌவ் சௌவ் 12 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *