தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள்… காளைகளுடன் களமாடும் காளையர்கள்…

ஈரோடு, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

முதலில் கோவில் காளை விடப்பட்டு, அதன்பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பாய்ந்து அடக்கியதை அங்கிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டுரசித்தனர்.

பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட காளைகளும், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடிவீரர்கள் அடக்கினர்.

பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, பொதுமக்கள் உற்சாகமாக கண்டுரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல், திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *