தமிழ் நாட்டில் புதிதாக 11 தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்….

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், பல்வேறு நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விமான உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த கட்டிட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *