டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2000 செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்… தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2000 செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு உதவி செய்தவர்களை மறக்காதவர் எம்ஜிஆர் என்று கூறினார். தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக கல்வி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2000 செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *