பெட்ரோல் பங்குகள் வரும் 13ம் தேதி வேலைநிறுத்தம் போராட்டம்.. ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டம்.

தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை கண்டித்து பெட்ரோல் பங்குகள் வரும் 13ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

தினமும் பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் மத்திய ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தினசரி விலை நிர்ணயம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வரும் 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *