உதான் திட்டத்தின் கீழ், சென்னை – சேலம் இடையே இயக்கப்படும் ஒரே ஒரு விமானத்தில் விழாக் காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சேலம் – சென்னை இடையே 72 இருக்கைகள் கொண்ட விமானத்தை ட்ரூ ஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து காலை 10.20க்கு புறப்படும் விமானம், அங்கிருந்து 11.30க்கு புறப்பட்டு மீண்டும் சென்னை வருகிறது.
நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இச்சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 50 விழுக்காடு டிக்கெட்டுகள் ஆயிரத்து 499 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் என்பதால், 5 ஆயிரம் தொடங்கி 7 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் மேலும் சில விமானங்களை இயக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.