700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப், அதிபராக பதவியேற்ற முதல் 8 மாதங்களில், நாளொன்றுக்கு 5 பொய்கள் வீதம் 1,137 குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நிகழ்ந்த சமயத்தில், 1,205 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018, டிசம்பர் 20-ம் தேதியுடன், டிரம்ப் அதிபராக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்தநிலையில், அவர் இதுவரை 7,546 தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.