சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீபிரியா, ஸ்நேகன், காந்தி கண்ணதாசன், கமீலாநாசர் உட்பட செயற்குழுவின் 18 உறுப்பினர்களும் நிர்வாகக் குழுவின் 5 உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, கட்சியை வலுப்படுத்துவது, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மக்கள் நீதிமய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *