சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் – அமித் ஷா திட்டவட்டம்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஒவ்வொரு நபரும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கயா முஸ்லீம் அகதிகள் ஏழு பேர் மியான்மருக்கு நேற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதைத் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் எனுமிடத்தில் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கான மாநாட்டில் அமித் ஷா பேசினார்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத ஒவ்வொரு அந்நியரும், அடையாளம் காணப்பட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.. எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி தருவதாகவும் அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *