மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு ஜெர்ஸி பரிசளித்த மெஸ்ஸி

பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியின் சூப்பர்ஸ்டார் லியோன்னல் மெஸ்ஸி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு ஜெர்ஸி ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஆண்டு 17 வயதினருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்ற நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஒரு ஜெர்ஸியை மெஸ்ஸி பரிசளித்துள்ளார். அதில் மேற்குவங்கத்தின் திதி என மம்தாவின் பெயரும், 10 என்ற எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை மம்தாவை சந்தித்து நேரில் வழஙக வாய்ப்பு கிடைக்காததால், அவரிடம் கொடுக்குமாறு போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *