மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்… இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கிய போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து அவர் சதம் அடித்தார்.

விராட் கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பந்த் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது- ஆனால் அவர் 92 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 500 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *