கைவிடப்பட்ட கல்குவாரியில் கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல்

சீனாவில் கைவிடப்பட்ட கல்குவாரியில் கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டது. இன்டர் காண்டினன்டல் ஷாங்காய் வொன்டர்லாண்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இந்திய மதிப்பில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 17 மாடிகளுடன், 336 அறைகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் உல்லாசப் பிரியர்களுக்கும், சாகசம் செய்பவர்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கும் என நிர்வாக அதிகாரி கென்னத் சான் தெரிவித்துள்ளார்.

இந்த பிரமாண்ட கட்டடத்தின் அருகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவி, வனப்பகுதி, படகு சவாரி என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. முறைப்படி திறக்கப்பட்டாலும் வரும் 20ம் தேதிதான் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *