கிர் சரணாலயத்தில் ஒரே மாதத்தில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்குள் 23 சிங்கங்கள் உயிரிழந்தன.

ஆசிய சிங்கங்களின் கடைசிப் புகலிடம் எனப்படும் கிர் வனப்பகுதி குஜராத் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற மாநில வனப்பகுதியிலும் சிங்கத்தை வளர்க்க திட்டமிடப்பட்டது.

ஆனால் அதற்கு குஜராத் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14 சிங்கங்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்தன. இதையடுத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 9 சிங்கங்களும் இறந்ததால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு வனஉயிரின ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *