இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல்.கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும் மும்பை அணியும் மோதின.
28வது நிமிடத்தில் மாரியோ ஆர்க்யூஸ் ஒரு கோல் அடிக்க முதலாவது பாதியில் 1-0 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் யாரும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாப்லோ மார்கடோ கோல் அடிக்க, 2-0 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றது.