பாகிஸ்தான் கர்த்தார்ப்பூருக்கு இந்தியாவில் இருந்து சாலை அமைக்கும் திட்டம் ஆபத்தான நடவடிக்கை என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசாமியிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். கர்த்தார்ப்பூர் சாலைத்திட்டம் ஆபத்தான நடவடிக்கை என்றும், முறையான ஆய்வுக்குட்படுத்தாமல் இதைச் செயல்படுத்தினால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
கடவுச்சீட்டை மட்டும் காட்டிவிட்டுச் செல்லலாம் எனக் கூறியிருப்பது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார். டெல்லி சாந்தினி சவுக் கடைத்தெருவுக்குச் சென்றால் 250ரூபாய்க்குக் கடவுச்சீட்டு வாங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியவர்களை 6மாதத்துக்கு முன் பதிவு செய்ய வைக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் இருந்து யாரையும் இந்தியாவுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.