ஷில்பா ஷெட்டியின் தலைமையில் பிலேங்கத்தான் கின்னஸ் சாதனை

நடிகை ஷில்பா ஷெட்டியின் தலைமையில் நடைபெற்ற அதிகம் பேர் பங்கேற்ற 60 விநாடி பிலேங்கத்தான் நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.

உடற்பயிற்சி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடிகை ஷில்பா ஷெட்டி தலைமையில் புனேவில் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் தனியார் நிறுவனம் சார்பில் கின்னஸ் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏற்கெனவே 60 விநாடிகள் பிலேங்க் நிலையில் நிற்கும் உடற்பயிற்சி சீனாவில் ஆயிரத்து 779 பேரைக் கொண்டு ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

அதை முறியடிக்கும் விதமாக புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி உள்பட 2 ஆயிரத்து 353 பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் பிலேங்க் நிலையில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர். இதை ஷில்பா தமது சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *