அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் காரணமாக, ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பனிப்புயல் வீசுவதால், பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பனிப் புயலால் போக்குவரத்து மற்றும் மின்சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், விடுமுறை முடித்து, சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் ஏராளமானோர் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதிகபட்சமாக சிகாகோ விமான நிலையத்தில் இருந்து 900 விமானங்களும், கன்சாஸ் நகரத்தில் 200 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 15,000க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.