உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், எட்டு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து டெல்லி நோக்கி ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ரேபரேலி அடுத்த ஹர்சந்த்புர் ரயில் நிலையம் அருகே இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்தில் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், ரயிலில் இருந்த ஏராளமான பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.