தாய்லாந்தில் மழை காரணமாக ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்ற விமானம் விபத்தில் இருந்து தப்பியது. பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமானநிலையத்தில், தாய் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ரக விமானம் தரையிறங்க ஆயத்தமானது.
அந்த விமானத்தில் 97 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். அப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானி முயன்றபோது, ஓடுதளத்தில் இருந்து விமானம் வழுக்கிக் கொண்டு சென்றது. இதன் காரணமாக விமானம் குலுங்கியதால் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.