உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகய் இன்று பதவியேற்பு…

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவந்த தீபக் மிஸ்ரா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பதவியேற்றுக் கொள்கிறார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகாய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார். 14 மாதங்கள் பதவியில் நீடிக்கும் அவர், அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *